யாழ் கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவில் அருகாமை உள்ள உணவகத்தில் பல்லி (புரியாணி) உணவு வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த உணவக உரிமையாளரை தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது உணவு பொதியில் பல்லி இறந்து கிடந்த விடயத்தை கூறியுள்ளார்.
எனினும் உணவக உரிமையாளர் உணவு பெற்றுக்கொண்ட விலைச்சிட்டை உள்ளதா? என்ன ஆதாரம் எமது உணவகத்தில் பெற்ற உணவிற்கு உள்ளது என அவ்வாடிக்கையாளரை எச்சரித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலை எதிர்பாராத வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் தனது நிலைமையை கூறி நியாயம் பெற்றுத் தருமாறு மன்றாடி வருகின்றார்.
மேலும் இச்சம்பவம் நேற்றிரவு நடைபெற்றுள்ளதுடன் இதே வீதியில் உள்ள பிரபல உணவகமும் இரு கிழமைக்கு முன் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.