இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தபோது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவரிடம் முன்வைத்த அதிமுக்கியத்துவம் வாயந்த கோரிக்கையை அறிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள்!!
அப்படி என்ன கோரிக்கையை முதல்வர் மோடியிடம் முன்வைதிருப்பார்??
• சமஷ்டி அடிப்படையிலான தீர்வு திட்டம் ஒன்றை தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்க, இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றை முன்வைத்தாரா???
• அல்லது தமிழீழம்தான் தமிழர்களுரிய ஒரே தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பை வடகிழக்கில் நடத்துவதற்கான ஒரு பிரேரணையை அமெரிக்காவின் அனுசரனையுடன் இந்தியா ஐ.நா. சபையில் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாரா??
• இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீளப்பெற்றுத்தர ஆவண செய்யவேண்டும் என இந்த பிரதமரிடம் வலியுறுத்தினாரா??
• போரால் அங்கவீனர்களாகி இன்று வாழ்வாதாரத்துக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் தொடர்பாகவோ, குடும்பத் தலைவிகளாகவுள்ள பல்லாயிரக் கணக்கான பெண்களின் வாழ்வின் விடியலுக்காகவோ, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாகவோ எமது மக்களின் துயர் துடைப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்று எதாவது கோகையை மோடியிடம் மோடியிடம் முன்வைத்தாரா???
இவைகள் எதுவுமேயில்லை. அப்படியானால் அப்படி என்ன அதிமுக்கியமான கோரிக்கையை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் முன்வைத்திருந்தார்??
முதலமைச்சர் மோடியிடம் முன்வைத்த முக்கியமாக கோரிக்கை இதுதான்...
13 இளம் பெண்களை வன்புணர்ந்தமைக்காகவும் ஆச்சிரமத்தில் வாழ்ந்த ஒருவரைக் கொலை செய்வதற்கு சதி செய்ததற்குமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிறேமானந்தா சுவாமி ஆச்சிரமத்தைச் சேர்ந்த நால்வரை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்களால் கொடுக்கப்பட்ட கடிதத்தை அந்த வழக்குத் தவறாகப் பதியப்பட்டது என்ற விடயத்தினையும் சுட்டிக் காட்டி 4 இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்ததாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இன்று சபையில் முதலமைச்சர் முன்வைத்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையை அம்பலப்படுத்தினார்.
வீடியோ வை பார்வையிடுங்கள்.
10க்கு மேற்பட்ட சிறுமிகளை கற்பழித்து, பலபேரை கொலை செய்ததால் இரட்டை ஆயுள்தண்டணை பெற்ற ஒரு படுபயங்கரமான கிரிமினல் பிறேமாந்தாவை கடவுளாக ஒருவர் போற்றுகிறார் என்றால் எப்படிபட்ட அறிவான மனிதர்???
அவரை அதிகூடிய வாக்குகளால் யாழ்பாணமக்கள் தெரிவு செய்துள்ளார்கள் என்றால் யாழ்பாண மக்கள் எப்படிபட்ட அறிவானவர்கள்??
கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன??
தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!!