மட்டக்களப்பு செங்கலடியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இனம் காணப்படாத ஒரு வகை மிருகம் ஒன்றினை பழைய செல்லம் தியட்டர் கட்டிடத்திற்குள் வைத்து பிடித்துள்ளனர்.
குறித்த மிருகம் நீர் நாய் போன்று உள்ளதனால் அது குறித்து வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்து அதனை இரவு 7 மணியளவில் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களும் குறித்த விலங்கை அடையாளம் காணமுடியவில்லை என்று கூறி வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முயற்சித்த வேளை அது தப்பிச் சென்றுள்ளது.
ஏறாவூர் 4 ம் குறிச்சி பக்கமாக தப்பிச்சென்ற குறித்த மிருகம் மனிதர்களை கடிக்க பாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
படத்தில் உள்ளதை போன்ற மிருகத்தை காண்பவர்கள் அர்ல்கில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது.