நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபனின் 30ம் ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாள் இன்று (15.09) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து இன்று (15) காலை 10.10 மணியளவில் தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்த நல்லூர் அலய பின் வீதியில் உள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தியாகி தீபம் திலிபன் பெயர் சூட்டிய பிள்ளையின் தாயாரான வாகீஸ்வரி அம்மா பொது ஈகைச் சுடரினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த அஞ்சலி நிகழ்வில், பொது மக்களும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.