வேலாயுதம்’ திரைப்படத்தில் இருந்து விஜய் ஆண்டனியின் இசையில் ‘மஞ்சனத்தி மரத்துக் கட்டை’ என்கிற குத்துப்பாடலோடு பிக் பாஸ் வீட்டின் காலைப்பொழுது மங்கலகரமாக துவங்கியது.
கர்நாடக சங்கீத பாணியில் அந்தப் பாடல் துவங்கும் போது ‘அடடே.. பாடல்களை தேர்ந்தெடுப்பவர் இன்று திருந்தி விட்டாரோ’ என்று தற்காலிமாக ஏமாந்து விட்டேன்.
கடந்த சில நாட்களாக பிக் பாஸ் போட்டியாளர்களை பெண்டு எடுத்திருப்பதால், உடல் வலி காரணமாகவோ என்னமோ, நடனமாடுவதில் எவரும் ஆர்வம் காட்டவில்லை. சுஜா மட்டும் மெலிதாக நடனமாடினார்.
‘நன்றி. பிக் பாஸ். எனக்குப் பிடிச்ச பாட்டு’ என்று அவர் கொஞ்சும் போது குழந்தை ரூபம் மறுபடி வந்து போனது. சுஜாவிற்குள் பல ரூபங்கள். லேடன் தெரியுமா… பின்லேடன்…
வெளியில் ஒட்டப்பட்டிருந்த மதிப்பெண் பட்டியலைப் பார்த்துவிட்டு, தன்னுடைய மதிப்பெண் குறைவாக இருப்பதையொட்டிய சந்தேகத்தை பிந்துவிடம் விரக்தியுடன் கூறினார் சிநேகன்.
‘அடப்போங்கப்பா’ எனும் மனநிலைக்கு சிநேகன் வந்து விட்டார். ‘நூறு நாள் இருக்கிற நம்பிக்கையே போயிடுச்சு. ‘நான் வேண்டுமானால் என் பாயிண்ட்டுகளை தந்து விடவா?” ன்னு சுஜா கேட்டதுதான் எனக்கு கோபம்.
ஜெயிக்கலைன்றதுக்காக கூட இல்ல. கணேஷ் வேற எப்பவும் சுஜாவிற்குத்தான் சப்போர்ட் பண்ணுவார். அவரையே நீதிபதியா போடறதெல்லாம் என்ன நியாயம்?’ என்றெல்லாம் சிநேகனின் பொங்கல் அமைந்தது. ‘ஆமாம்.. நீங்க அத்தனை நேரம் ரொம்ப கஷ்டப்பட்டீங்க.” என்று ஆறுதல் சொல்ல முயன்றார் பிந்து.
Part 02
Part 03
Part 04
Part 05