ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, March 25
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் ரூ.100 கோடி சொத்து, 3 வயது குழந்தையை விட்டுவிட்டு சாமியாரான இளம்தம்பதி

    AdminBy AdminSeptember 17, 2017No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    மத்திய பிரதேச மாநிலம் நீமுச் எனும் ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரசிங் ரதோர்.

    சிமெண்ட் தொழிற் சாலைகளுக்கு சாக்கு தயாரித்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கோடீசுவரரான இவரது ஒரே மகன் சுமித் ரதோர் (வயது35).

    லண்டனில் உள்ள கல்லூரியில் ஏற்றுமதி- இறக்குமதி நிர்வாகம் பற்றிய டிப்ளமோ படித்த அவர் 2 ஆண்டுகள் அங்கு பணி புரிந்து வந்தார். பிறகு மத்திய பிரதேசம் திரும்பி இவர் தனது தந்தையின் சாக்கு தயாரிக்கும் நிர்வாகத்தை செய்து வந்தார்.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நீமுச் நகரைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் அசோக் சாந்தா லியாவின் மகள் அனாமிகா (வயது34)வுக்கும் திருமணம் நடந்தது.

    அனாமிகா ராஜஸ் தானில் சிகாரில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர். துத்தநாகம் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர் திருமணத்துக்கு பிறகு வேலையை விட்டு, விட்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.

    சுமித் ரதோர் – அனாமிகா தம்பதிக்கு அபயா என்ற 3 வயது பெண் குழந்தை இருக்கிறாள். இந்த நிலையில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும் தங்கள் மதக் கோட்பாட்டை பின்பற்றி இல்லற வாழ்வைத் துறந்து துறவியாக செல்ல முடிவு செய்தனர்.

    முதலில் அவர்கள் துறவியாக இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப வில்லை. என்றாலும் சுமித்தும் அனாமிகாவும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். கடந்த 6 மாதமாக அவர்கள் இருவரும் துறவுக்காக பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வந்தனர்.

    கடந்த மாதம் 22-ந்தேதி குஜராத் மாநிலம் சூரத் சென்ற அவர்கள் தாங்கள் துறவி ஆகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    அவர்களை சமரசம் செய்ய பெற்றோர் அசோக் சாந்தாலியாவும், ராஜேந்திரசிங் ரதோரும் முயன்றனர். “ரூ.100 கோடி சொத்துக்கு வாரிசான நீ இப்போது துறவறம் மேற் கொள்ள வேண்டாம்” என்று ராஜேந்திர சிங் ரதோர் கெஞ்சினார்.

    ஆனால் அந்த சமரசத்தை சுமித்தும் அனாமிகாவும் நிராகரித்து விட்டனர். எனவே அவர்கள் இருவரும் துறவு வாழ்வு மேற்கொள்வது உறுதியாகி விட்டது.

    வருகிற 23-ந்தேதி அவர்கள் இருவருக்கும் சூரத்தில் தீட்சை வழங்கப் படுகிறது. அன்று முதல் அவர்களது துறவு வாழ்க்கை தொடங்கும்.

    அதுவரை சுமித்- அனாமிகா இருவரும் மவுனத்தை கடைபிடிப்பதாக அறிவித்துள்ளனர். ரூ.100 கோடி சொத்து, 3 வயது குழந்தையை விட்டு விட்டு இளம் வயதில் அவர்கள் துறவியாவது ஜெயின் சமூக மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவர்களது மகள் அபயாவை அனாமிகாவின் தந்தை அசோக் சந்தோலியா தனது பொறுப்பில் வளர்க்கப் போவதாக கூறியுள்ளார்.

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    சுயநினைவை இழந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

    March 25, 2023

    பெண் கொலை வழக்கில் கிளி சாட்சியத்தால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

    March 25, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2017
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

    March 25, 2023

    இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது

    March 25, 2023

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
    • ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
    • “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்
    • இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version