வவுனியா நோக்கி வந்த பேருந்தில் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்தது மாணவியிடம் சேட்டை புரிந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு வந்த பேருந்தில் விடுமுறையில் வீடு சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் அதே பேருந்தில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மாணவி மீது சேட்டை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவி போட்ட கூச்சல் சத்தத்தையடுத்து குறித்த இராணுவச் சிப்பாயை பேருந்தில் பயணம் மேற்கொண்டவர்களின் உதவியுடன் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கலாபோகஸ்வவே இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவச் சிப்பாயே இவ்வாறு சேட்டை புரிந்துள்ளார் எனவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.