இந்தியாவில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்க தவறிய மனைவியை கணவர் உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ருஷி குமார்(27) மற்றும் ஹரிக்கா(25) என்ற தம்பதி திருமணம் புரிந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
மனைவி பி.டி.எஸ் முடித்தவர் என்பதால் அடுத்த எம்.பி.பி.எஸ் படித்து முடிக்க வேண்டும் என கணவன் வலிறுத்தி வந்துள்ளார்.
ஆனால், கடினமாக படித்தும் ஹரிக்காவால் எம்.பி.பி.எஸ் சீட் வாங்க முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ருஷி குமார் ஹரிக்காவை தொடர்ச்சியாக சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ருஷி குமாரின் வீட்டில் ஹரிக்கா எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
பொலிசார் விசாரணையின்போது ‘மனைவி தற்கொலை செய்துக்கொண்டார்’ என ருஷி குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹரிக்காவின் பெற்றோர் பேசுகையில் ‘எம்.பி.பி.எஸ் சீட் வாங்காததால் எங்களது மகளை ருஷி குமார் உயிருடன் எரித்து கொலை செய்துவிட்டார்.
மேலும், ஏற்கனவே பெற்ற வரதட்சனையை விட கூடுதலாக பணம் கேட்டு மகளை சித்ரவதை செய்துள்ளனர்’ என புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் பேசுகையில் ‘கணவர் தற்கொலை எனக்கூறினாலும், இது திட்டமிடப்பட்ட கொலையாக தான் தெரிகிறது.
தற்போது கணவரையும் அவரது பெற்றோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
ஹரிக்காவின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கூடுதல் தகவல்கள் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.