Site icon ilakkiyainfo

பொலிசாரைக் கண்டதும் காதலியை கைவிட்டு தப்பியோடிய காதலன்..!

யாழ் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் பொலிஸாரைக் கண்டதும் காதலியைக் கைவிட்டு காதலன் தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை முதல் தமது பிள்ளையைக் காணவில்லை என பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

குறித்த 14 வயதுடைய சிறுமி 19 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காதலிப்பதாகவும் குறித்த இருவரும் கற்கோவளம் பகுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்குப் பொலிஸார் சென்றுள்ளனர். வீடொன்றில் தங்கியிருந்த இளைஞன் பொலிஸாரைக் கண்டதும் சிறுமியைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

சிறுமியைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற பொலிஸார் இளைஞனைத் தேடி வந்துள்ளனர்.

இன் நிலையில் இளைஞன் இன்று பிற்பகல் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version