வரலாற்றுச்சிறப்பு மிக்க வடமாரட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 7ஆம் திருவிழா வரை சுவாமி உள்வீதி உலாவும், 27ஆம் திகதி புதன்கிழமை முதல் அடுத்தமாதம் 6ஆம் திகதி வரை சுவாமி வெளிவீதி உலாவும் இடம்பெறும்.
முக்கிய திருவிழாக்க ளான குருக்கட்டு விநாயகர் தரிசனம் 27ஆம் திகதி புதன்கிழமையும், வெண்ணைய்த்திருவிழா 28 ஆம் வியாழக்கிழமையும், துகில் திருவிழா 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், பாம்புத்திருவிழா 30 ஆம் திகதி சனிக்கிழமையும், ஹம்சன் போர் திருவிழா அடுத்த மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், வேட்டைத்திருவிழா 2 ஆம் திகதி திங்கட்கிழ மையும், சப்பறத்திருவிழா 3 அம் திகதி செய்வாய்க்கிழமையும், தேர்த்திருவிழா 4 ஆம் திகதி புதன்கிழமையும், சமுத்திரத்தீர்தத்திருவிழா 5ஆம் திகதி வியாழக்கிழமையும், கேணித்தீர்த்திருவிழா 6ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளன. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி இறக்கத்துடன் பெரும் திருவிழா நிறைவுபெறும்.
வடக்கு வெளிவீதியில் சுவாமி உலாவரும் போது கற்கோவளம் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று அந்நாள் திருவிழா கருத்தை சித்தரிக்கும் முறையில் இடம்பெறும். பெரும் திருவிழாவின் பகல் திருவிழா காலை 8 மணிக்கும் இரவுத்திருவிழா மாலை 4.30 மணிக்கும் தினமும் ஆரம்பாகும்.
பெரும் திருவிழா காலத்தில் பருத்தித்துறை – மந்திகை ஊடாக வல்லிபுரகோயில், பருத்தித்துறை – தும்பளை ஊடாக வல்லிபுர ஆழ்வார் கோயில், யாழ்ப்பானம் – வல்லிபுரகோவில் ஊடாக பருத்தித்துறை ஆகிய பாதைகளில் சிறப்பு பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
சமயக் கோட்பாடுகளுக்கும் கலாசாரத்துக்கும் அமைவாக அடியவர்கள் உடைகள் அணிந்து தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்து திருவிழாக்க ளில் கலந்துகொள்ளுமாறு ஆலய அறங்காவலர்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.