நடுரோட்டில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. நகர சாலையிலே இந்த நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 18ம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையில் பைக் ஓட்டி வந்துள்ளார்.அப்போது, குழந்தை வெளியே வருவது அறியாமல் இருந்துள்ளார். இதை கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு செல்ல நேரம் இல்லாத நிலையில் உடனே ஒன்று கூடிய வழிப்போக்கர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி குழந்தையை பத்திரமாக எடுத்துள்ளனர்.
தற்போது, தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.