புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பத்துளு ஓயா உடப்பு சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், பேரூந்தின் நடத்துநர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பேரூந்தின் சாரதி உட்பட நால்வர் சிலாபம் வைத்தியசாலையிலும், எஞ்சிய இருவர் முந்தல் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(26) அதிகாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து உடப்பிற்கு மீன் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியின் பின் புறத்தில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து மோதியதால் மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த நடத்துநரின் சடலம் பிரத பரிசோதனைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.