மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் தாயாரின் சாட்சியத்தை ஏற்றுகொண்டது தீர்ப்பாயம்!
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாய் வழங்கிய சாட்சியத்தையும், அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டுள்ளது.
கூட்டு வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தண்டனைத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
தற்போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் 332 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.
தீர்ப்பை எதிர்பார்த்து திறந்த நீதிமன்றில் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டுள்ளனர்
நீதிபதி சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயலட் பார் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான அமர்வு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் சற்று முன்னர் கூடியுள்ளது.
தற்போது வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசிக்க தொடங்கியுள்ளார்
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சிறுவனின் சாட்சியத்தை ஏற்றது நீதிமன்று!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் 13 வயதுப் பாடசாலை மாணவன் வழங்கிய சாட்சியத்தைத் தீர்ப்பாயம் உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.
இந்த வழக்கில் இரண்டாம் எதிரியை வீதியில் கண்டதாக சிறுவன் வழங்கிய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின் சந்தேகநபர் லஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக சாட்சியமளித்த இப்லானின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அவர் குற்றம் நடத்த இடத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்ற ரீதியும், குற்றத்துடன் தொடர்பற்றவர் என்ற ரீதியிலும் தீர்ப்பாயம் சாட்சியத்தை ஏற்றுக் கொண்டுள்ளது
கூட்டு வன்கொடுமை இடம்பெற்றமையை ஏற்றது தீர்ப்பாயம்!
அரச தரப்புச் சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியம் மற்றும் மற்றொரு கண்டகண்ட சாட்சியான நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தின் அடிப்படையிலும், சட்ட வைத்திய அதிகாரி மயூரதனின் சாட்சியத்தின் அடிப்படையிலும் மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பதைத் தீர்ப்பாயம் உறுதி செய்தது.
கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது.
யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.
2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகள் தான் இந்த வன்புணர்வை மேற்கொண்டனர்!
கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது.
யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.
2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகள் தான் இந்த வன்புணர்வை மேற்கொண்டனர் என்று தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது.
காணொளி எடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டது மன்று!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது.
தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்
நடராசா புவனேந்திரனின் (மாப்பிள்ளை) சாட்சியத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலும், முதன்மை விசாரணைகளின் போது கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் குற்றச் செயல் காணொளி எடுக்கப்பட்டதை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.
நால்வர் மீது கூட்டுவன் புணர்வு, கொலை குற்றச்சாட்டுக்கள் உறுதியானது!
வித்தியா படுகொலை வழக்கின் 2, 3, 5, 6 ஆம் எதிரிகள் கூட்டு வன் புணர்வு, கொலைக் குற்றவாளிகள் என மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் அடையாளம் கண்டுள்ளது. 332 பக்க தீர்ப்பினை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி சசி மகேந்திரன் வாசித்துவருகின்ற நிலையினில் குற்றவாளிகள் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.
இவ்வகையினில் 2, 3, 5, 6 ஆம் எதிரிகள் கூட்டு வன் புணர்வு, கொலைக் குற்றவாளிகள் என மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் அடையாளம் கண்டுள்ளநிலையினில் அவர்களிற்கு மரணதண்டனை விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனையோரினில் சிலருக்கு உடந்தையாக இருந்தமைக்கான தண்டனைகளும் இன்னும் சிலர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் நீதிபதி மா.இளஞ்செழியன்!
தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தனது தீர்ப்பை நிறைவு செய்தார்.
நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கள் தீர்ப்பாயத்தின் தலைவரின் தீர்ப்பே தனது தீர்ப்பு என்று அறிவித்தார்.
தற்போது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.
ஏன் உங்களுக்குக் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என கேள்வி
1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்த்து ஏனைய 7 எதிரிகளிடமும் ஏன் உங்களுக்குக் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயம் தற்போது கேட்டுள்ளது.
விஜயகலாவின் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கை
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நடவடிக்கை சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை.
பொதுமக்கள் சுவிஸ்குமாரைக் கட்டி வைத்து அடிக்கும்போது அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அவரிடம் நீ சசியின் (இந்தப் பெரும் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4ஆம் எதிரி) அண்ணாவா என்று கேட்டு, சுவிஸ்குமார் ஆம் என்றவுடன் விஜயகலா மகேஸ்வரன் பொதுமக்களை அவிழ்த்து விடுமாறு கூறியுள்ளார்.