இறைச்சியை வாட்டும் உபகரணத்தில் தனது 2 வயது மகளை உயிருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
சட்டக் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள 27 வயது தாயின் பெயர் வெளியிடப்படவில்லை.
பிரஸல்ஸ் நகரின் வடக்கே ஸெம்ஸ்ட் நகரிலுள்ள வீட்டின் கார் தரிப்பிடத்தில் வைத்து அந்தத் தாய் தனது மகளை உயிருடன் நிலக்கரித் தணலைக் கொண்ட உபகரணத்தில் வைத்து வாட்டியதாக கூறப்படுகிறது.
குழந்தையின் கூச்சலைத் தொடர்ந்து அந்த வாகனத் தரிப்பிடத்தின் வாயில் கதவின் கீழாக புகை வெளிப்படுவதை அவதானித்த அயலவர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது அந்த வாகனத் தரிப்பிடத்திலிருந்த இறைச்சி வாட்டும் உபகரணத்தில் குழந்தையின் முழுமையாக எரிந்து கருகிய சடலம் இருப்பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
மேற்படி குழந்தையின் தாய், தனது கணவர் தன்னிடமிருந்து விவாகரத்துக் கோரியதையடுத்து கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்யும் ஒரு முயற்சியின் அங்கமாக தனது குழந்தையைக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை களை மேற்கொண்டுள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவிக் கின்றனர்.