வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதனை தொடர்ந்து மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை நேற்றுடன் 1167ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 826 பேர் தமது மரண தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். இதில் 37 பேர் பெண்கள் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் வெலிக்கடை, மஹர, தும்பர, அனுராதபுரம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளிலேயே தடுத்து வைக்கப்படுவார்கள்.
இதேவேளை வித்தியா கொலை சம்பவம் தொடர்பாக நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் வெலிக்கடை, மஹர மற்றும் தும்பர சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.