மும்பையிலுள்ள எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மும்பையில் இன்று காலையில் பெய்த அடைமழையையடுத்து, எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ளது ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டது.
இன்று காலை சுமார் 10.50 மணிக்கு குறித்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் அதில் இருந்த மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, அங்கிருந்த பெருமளவிலான மக்கள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது, பெரும் பீதி ஏற்பட்டதையடுத்த அங்கு பெரும் சனநெரிசல் ஏற்பட்டது.
அதில் படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், மேலும் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.