இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவின் தலைநகராக இருந்த சிரியாவின் ரக்காவை கைப்பற்றுவதற்கான போர் நடக்கும் இடத்தில் இருந்து பிபிசி களத் தகவல்களை அளிக்கிறது.
அங்கு தற்போது சில நூறு ஐஎஸ் குழுவினரே போரிட்டு வருகின்றனர். பிபிசியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான செய்தியாளர் தலைமையில் பிபிசி குழு அங்கு சென்றிருந்தது.
இந்த குழு மாத்திரமே ரக்காவுக்கு சென்ற ஒரே தொலைக்காட்சி குழுவாகும். களத்தில் இருந்து அவர்கள் தரும் தகவல்களில், மனதுக்கு சங்கடத்தை தரக் கூடிய காட்சிககளும் உள்ளன.
-பிபிசி செய்தி-