கற்பழித்தவரின் காதை கடித்து, அந்த காதுடன் மூன்று நாட்களாக காவல் நிலையம் சென்று புகார் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட பெண் படாதபாடு பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கிராமம் டவுட்டாலி. இங்கு 30 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த திங்ட்கிழமை இரவு வீட்டிற்குள் அந்த பெண் தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அவரது கணவர் வீட்டிற்கு அருகில் தற்காலிகமான அமைக்கப்பட்ட அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து விட்டைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை கற்பிழித்தனர்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கணவன் ஓடிவந்தார். அப்போது அந்த கும்பல் அவரின் கணவரை தாக்கினார்கள்.
பெண் தன்னை காப்பிற்றிக் கொள்வதற்கான ஒருவனின் காதை கடித்தாள். இருந்தாலும் அந்த கும்பல் விடவில்லை. பின்னர் கும்பல் தப்பி ஓடிவிட்டது.
பின்னர் தான் கடித்த காதை வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதற்கிடையே அந்த கும்பல் பெண்ணிற்கு மிரட்டில் விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால், நேற்று எஸ்.எஸ்.பி. ராஜேஷ் பாண்டேவை பார்த்து துண்டான காதுடன் முறையிட்டார்.
உடனே அவர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். போலீசார் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.