விஜய் டிவி -யின் பிரபலமும் மற்றும் நடிகருமான தாடி பாலாஜி தன் மனைவி நித்யாவின் நடவடிக்கையை பற்றி தொடர்ந்து சந்தேக குற்றசாட்டுகளை வெளிப்படையாக கூறி வருகிறார்.
இந்த குடும்ப பிரச்சனை காரணமாக சமீப காலமாக பாலாஜி நீதிமன்றத்தை அணுகிவருவது குறிப்பிடத்தக்கது. இவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு இவரது மனைவி நித்யாவும் அதை மறுத்து வருகிறார்.
இந்நிலையில் பாலாஜி தன்னுடைய வீட்டில் தன் மனைவியையும் குழந்தையையும் படுக்கை அறையில் பூட்டி வைத்து தீ பற்றவைத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட புகை அறை முழுவதும் பரவி சம்பவம் அறியாத இருவரும் அதிர்ச்சியாயினர்.
இந்த சூழ்நிலையில் நித்தியா தனது செல் போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி பரவி வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் பாலாஜிக்கு எதிராக கிளம்பியுள்ளது. இந்த விடியோவை கீழே இணைத்துள்ளோம்.