விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் நடுவரும், நடிகருமான பாலாஜிக்கும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்திருந்தனர்.
மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பாலாஜியும், விவாகரத்து வேண்டும் என நித்யாவும் கூறிவந்தனர். இந்நிலையில், தன் மனைவிக்கு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஜிம் ட்ரெயினருடனும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள்தான் தன் மனைவியுடன் சேர்ந்து வாழவிடாமல் தடுப்பதாகவும் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாலாஜி.
மேலும், தற்போது பாலாஜி, நிதியாவை திட்டுவது போன்ற வீடியோவும் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து நித்யாவிடம் பேசினோம்…
“அவர் இப்படித்தான் பலருடன் என்னை சேர்த்துவெச்சு பேசுவார். அதனால எனக்கு இந்த மாதிரியான புகார் புதுசா தெரியலை. . அவரைப் பொறுத்தவரை எனக்கு யாரும் உதவி செய்யக் கூடாது அவ்வளவுதான்.
என்னையும் என் பொண்ணையும் ரூமுக்குள்ள அடைச்சு தீ வைச்சது சம்பந்தமா நான் மாதவரம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனப்ப,
அந்தப் புகாரை எடுக்க போலீஸ் தயங்கினாங்க. ஏன்னா அவங்களுக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கு. நான் எங்க கம்பிளையன்ட் கொடுக்க போனாலும் அந்த ஆளுங்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசுற கீழ்த்தர புத்தி பாலாஜிக்கு உண்டு.
இப்ப அவர் சொல்ற ஆயிரம் விளக்கு ஸ்டேஷன் கிரைம் டிபார்ட்மென்ட் எஸ்.ஐ மனோஜ் குமாரும், நான் வழக்கமா போற ஜிம்மோட டிரெயினரும் பாலாஜிக்கு குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். பிரச்னைனு வந்தபிறகு என்ன பண்றதுனு தெரியாம, மனோஜ்குமாரையும், ஜிம் டிரெயினரையும் என்னோட இப்ப தொடர்புப்படுத்தி பேசுறார் பாலாஜி.
மனோஜ்குமார் சார் எனக்குச் சகோதரர் மாதிரி. பாலாஜியால பிரச்னை வந்தப்ப அவர்கிட்ட சொல்லி நான் பலமுறை அழுதிருக்கேன். அப்பலாம், குடிக்கிறதுனாலதானே இந்தப் பிரச்னையெல்லாம்.
இனி அவர் குடிக்க மாட்டார். என்னை நம்புமா. நான் பிராமிஸ் பண்றேன்’னு சொன்னதோட இல்லாம, பாலாஜிக்கு அட்வைஸும் பண்ணினார்.
அதனாலதான் பாலாஜியோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சேன். ஆனா, வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சிருச்சு.
”இப்ப ஜிம் டிரெயினரும், நானும் நெருக்கமாக இருக்கிற மாதிரி போட்டோவை வெளியிடப்போறதா மீடியாகிட்ட சொல்லியிருக்கார். அந்த மாதிரி எந்த ஒரு போட்டோவும் இல்லை.
அவர் இதோட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசினார். அவங்க எல்லாம் எங்க ஃபேமிலி ஃபிரெண்ட்ஸ். அது எப்படிங்க ஒரு பொண்ணால இருபது பேரோட தொடர்பு வைச்சுக்க முடியும்… அதுவும் கணவருக்கு தெரிஞ்சு… எனக்குப் புரியலை.
கடந்த 22-ம் தேதி, கோர்ட்டில் விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ணிட்டேன். அதை தெரிஞ்சுகிட்ட பாலாஜி அவர் மேல இருக்கிற எஃப்.ஐ.ஆர் கேஸையும், டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸையும் திசைதிருப்ப பார்க்கிறார். என் மேல் எப்படியெல்லாம் பழி போடணுமோ அப்படியெல்லாம் போட்டுப் பார்க்கிறார்.
இப்ப ஃபேஸ்புக்ல வலம் வர்ற வீடியோவுல நடந்தது அத்தனையும் உண்மை. அதை பார்த்த பாலாஜி ரொம்ப டென்ஷனாகிட்டார். அவரோட வக்கீல் மூலமா என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டார். ‘
300 நாளில் உன்னை கோர்ட்டும் கேஸூமா அலையவெச்சு காட்டறேன்’னு அவரோட வக்கீல் என்கிட்ட சேலஞ்ச பண்ணாங்க. இப்ப திடீர்னு, ‘மியூச்சுவல் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடுறேன். ஆனால், உங்க குழந்தையை பாலாஜிகிட்ட கொடுத்துடுடணும்’னு சொல்றாங்க.
விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ணின பிறகு ஏன் இப்படிச் சொல்றாங்க. என்னை எமோஷனலாக வீக் ஆக்கப் பார்க்கிறாங்க.
மொத்தத்துல பாலாஜி நடத்துற ஸ்கிரிப்டட் டிராமாவினால நானும் என் பொண்ணும் ஒவ்வொரு நாளும் மனஉளைச்சலுக்கு ஆளாகிட்டிருக்கோம்.
எங்களை அவர் நிம்மதியாக வாழவிட்டால் போதும். கமிஷனர் ஆபீஸில் பாலாஜி நான் பேசினது மாதிரி ஒரு ஆடியோ சிடி கொடுத்ததாக சொல்றாங்க. அந்த ஆடியோவில் இருக்கிற வாய்ஸ் என்னுடையது கிடையாது” என்கிற நித்யா வீடியோ பற்றி சொன்னார்.
‘நீங்க வெளியிட்ட வீடியோ பார்க்க கண்றாவியா இருக்குது. அதை ஏன் வெளியிட்டு உங்க பொண்ணு லைஃபை கெடுக்குறீங்கனு பலரும் கேட்கிறாங்க. உண்மையில இந்த பிரச்னையினால என் பொண்ணு பாதிக்கப்படக்கூடாதுனு நான் நினைக்கிறேன்.
ஆனா அவர் அதைப் பத்தி கவலைப்படாம என்னைப் பத்தின வீடியோவை வெளியிடுவேன்னு மிரட்டுறதுனால, மக்களுக்கு அவரோட சுயரூபம் தெரியட்டும்னு நினைச்சுதான் அந்த வீடியோவை நான் வெளியிட்டேன்.
எல்லா இடங்களிலும் என்னோடு சேர்ந்து வாழ ஆசைப்படுறதா சொல்றர். அப்படிச் சேர்ந்து வாழ ஆசைப்படுபவரா கள்ளத்தொடர்பு அது இதுனு பழிகளைச் சுமத்துவார்? என்னை அசிங்கப்படுத்தினால், எப்படியும் ஃபீல் பண்ணி அந்த இடத்தைவிட்டு விலகி வந்துடுவேன்னு நினைக்கிறார்.
அடிக்கடி தன்னிடம் ஆதாரம் இருக்குதுனு சொல்றார். உண்மையில் ஆதாரம் இருந்தால், காண்பிக்க சொல்லுங்க. எனக்கு நல்லாத் தெரியும் அப்படி எதுவும் அவர்கிட்ட இல்லைன்னு.
சும்மா பூச்சாண்டி காண்பிச்சுட்டு இருக்கார். நான் வெளியிட்டிருக்கும் வீடியோ வெர்ஷன் எடிட் பண்ணினது. அதுல அவர் போஷிகாகிட்ட தப்பா நடந்திருப்பார்.
அதனாலேயே போஷிகா இப்ப அவ கிளாஸ்ல உள்ள பைன்களை கண்டாலே அலர்றா. எந்த பசங்ககிட்டேயும் பேசுறதில்லை. இதையெல்லாம் ஒரு அம்மாவா நான் எப்படி தாங்கிட்டு இருக்க முடியும் சொல்லுங்க” என்று கொதிப்பும் வேதனையுமாக சொல்கிறார் நித்யா