அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், படத்தில் இடம்பெறும் புறா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி படம் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது.
இன்று சென்னை வந்த விலங்குகள் நலவாரிய குழுவினர், ‘மெர்சல்’ படத்தை பார்த்து, புறா சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் என்று உறுதிசெய்யப்பட்டு, மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.
தடையில்லா சான்று வழங்க விலங்குகள் நல வாரியம் மெர்சல் படத்தின் சில காட்சிகளில் கையை வைத்துவிடுமோ என்று விஜய் ரசிகர்கள் அஞ்சினார்கள்.
இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் இன்று தடையில்லா சான்று வழங்கியுள்ளது. சான்று வழங்க படத்தின் காட்சிகளில் கையை வைத்துவிடுமோ என்று ரசிகர்கள் அஞ்சினர்.
நல்ல வேளை விலங்குகள் நல வாரியம் எந்த காட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து அதை நீக்குமாறு கூறவில்லை. அதனால் படம் கத்தரி போடாமல் அப்படியே ரிலீஸாகிறது.
தளபதி ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளி இன்றே துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதால், தீபாவளி தினத்தில் ‘மெர்சல்’ படம் திட்டமிட்டப்படி வெளியாக உள்ளது.