இன்று அதிகாலை யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வான் நடத்துனரும் சாரதியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
யாழில் தனியார் பேரூந்து சேவையிலீடுபடும் வானின் நடத்துனர் அந்த வான் முதலாளியின் வீட்டுக்கு அருகில் உள்ள 18 வயதான பிரபல பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.
இது மாணவியின் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வான் முதலாளியின் வீட்டுக்குச் சென்று குறித்த நடத்துனர் தொடர்பாக மாணவியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் பின்னர் குறித்த வானின் நடத்துடனர் வான் முதலாளியால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தின் பின்னரும் குறித்த நடத்துனரும் மாணவியும் இரகசியமாக பல இடங்களில் சந்தித்துள்ளதாக அறிந்த பெற்றோர் மலேசியாவில் உள்ள தமது மகனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அங்கிருந்து யாழ் வந்த மகன் இன்று அதிகாலை குறித்த வான் முதலாளி வீட்டில் வாகனம் எடுக்க வந்த நடத்துனர் மற்றும் சாரதி மீது கம்பியால் கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
தலையில் காயங்களுக்குள்ளான வாகனச் சாரதியும் நடத்துனரும் உடனடியாக யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் முதலாளியால் அனுமதிக்க்பபட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடுவதை வாகன முதலாளி தடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.