பெற்றெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து மனைவியால் கணவருக்கு காணொளி அனுப்பிவைத்த சம்பவம் ஒன்று வென்னப்புவவில் இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ பகுதியில் தாய் ஒருவரினால் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு 7 மாதங்கள் கடந்த நிலையில் தாயினால் பல கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன.
உணவு வழங்காமல் உடைகளை கிழித்தெறிவதும், வலி ஏற்படும் வகையில் குழந்தையை தாக்குவதும், குழந்தையை நீராட்டமல் அழுவதை கண்டு இரசிப்பதுமாக தாய் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
அது மாத்திரமின்றி குழந்தையை தாக்கும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து கணவரின் தொலைபேசிக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.
குறித்த தாய்க்கு 32 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
தாயினால் குழந்தைக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் குழந்தையின் தந்தையார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் மனைவியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள குழந்தையை சித்திரவதை செய்யும் காட்சிகளையும் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட வென்னப்புவ காவல் துறையினர் கடந்த 23 ஆம் திகதி குறித்த தாயை கைது செய்துள்ளதுடன் நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தினர்.
தாயின் செயல்களை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தாயை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.