பெண்களின் ஸ்கேர்ட்களுக்குள் (பாவாடை) கெமராவை வைத்து படம் பிடிக்கும் நடவடிக்கைக்க எதிராக ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் செயின்ற் பீட்டர்ஸ்பேர்க் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளார்.
பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் சம்பந்தப்பட்ட பெண்களுக்குத் தெரியாமல் அவர்களின் ஆடைகளுக்கு கீழ் கெமராவை வைத்து விஷமிகள் படம்பிடித்த சம்பவங்கள் குறித்து ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன.
அப்ஸ்கேர்ட்டிங் ( ‘upskirting’ ) என இந்த நடவடிக்கை குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான நடவடிக்கைக்கு எதிராக போராடத் துணிந்த யுவதியொருவர் ரஷ்யாவின் செயின்ற் பீட்டர்ஸ்பேர்க் நகர ரயில் நிலையத்தில் அண்மையில் தனியாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டார்.
அனா டோவ்கல்யுக் எனும் இந்த யுவதி ஒரு மாணவியாவார். மேற்படி ரயில் நிலையத்தில் ஆடையின் கீழ் பகுதியை இடுப்பு வரை உயர்த்திப் பிடித்தவாறு நின்றார்.
அப்ஸ்கேர்ட்டிங்குக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவையும் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.