தென்கொரியாவில், ரகசிய கெமராக்கள் மூலமாக, ஆபாசப்படம் எடுப்பது, அதிகமாக நடக்கக்கூடிய குற்றமாக உள்ளது. இதை சரி செய்யவும், ஆபாசப்படம் பார்ப்பவர்களை தடுக்கவும் புதிய யுக்தியை கையாண்டுள்ளது தென்கொரிய காவல்துறை.
ஆபாச படம் எடுப்பவர்களையும் பார்ப்பவர்களையும் காணொளி ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது தென்கொரிய காவல்துறை.
இந்த காணொளியில் பெண்கள் உடை மற்றுவது, படுக்கையறைக்கு செல்வது மற்றும் மின் உயர்த்தியில் குட்டையான ஆடைகளை அணிந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது இந்த காட்சிகள் யாவும் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இறுதியில் அந்த பெண்கள் பேய் போன்று மாறி, இந்த காணொளியை பார்வையிடுவர்களை பீதியில் உரைய வைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது.