அவிஸாவெல்ல – குடாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் தனது காதலியை வீட்டு ஜன்னலில் கட்டி வைத்து விட்டு அவர் கண் முன்னே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது 15 வயது காதலி வேறொரு நபருடன் காதல் தொடர்பு வைத்துள்ளார் என அறிந்து கொண்ட காதலன் தனது காதலியின் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சென்று தனது காதலியின் புதுக் காதலன் பற்றி கேட்ட போது ஏற்பட்ட வாக்கு வாதத்திலேயே காதலன் காதலியை வீட்டு ஜன்னலில் கட்டி வைத்து விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவிஸாவெலை ஆதார வைத்தியசாலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.