பலாங்கொடை ரன்தொலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 4 வயது பெண் குழந்தையொன்றின் உடலமொன்று தூக்கிட்ட நிலையில் , இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதிமா சௌம்யா என்ற பெண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் , குழந்தையின் தாய் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , வீடு திரும்பிய தாய் மகளை தேடியுள்ள நிலையில் , வீட்டின் பின்புறத்தில் மர்மமான முறையில் துக்கிட்ட நிலையில் குழந்தையின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் , பலாங்கொடை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும் , இது தற்கொலையா அல்லது கொலை சம்பவமா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.