மனைவி தன்னை துன்புறுத்துவதாகவும், அவருடன் விவாகரத்து வேண்டும் எனவும் கோரி டாக்டர் ஒருவர் செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஜகித்யால் மாவாட்டத்தை சேர்ந்தவர் அஜய்குமார் ராவ். டாக்டராக உள்ளார். மனைவி லஷ்யாவுடன் இவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உயரமான செல்போன் டவரின் மீது ஏறிய அஜய்குமார், அங்கிருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார்.
பின்னர் தான் எழுதிய கடிதத்தை கீழே தூக்கி போட்டார், அதை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், என் மனைவி என்னை துன்புறுத்துகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை வீட்டிலிருந்து வெளியில் துரத்தி விட்டார், எனக்கு உடனடியாக லஷ்யாவுடன் விவாகரத்து வேண்டும்.
இல்லையேல் கீழே குதித்து விடுவேன், நான் சொல்வதை போலீசார் கேட்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லையா என எழுதியிருந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், அஜய்குமாருக்கும், லஷ்யாவுக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இருவருக்கும் அடிக்கடி தகராறு வரும் கணவர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக லஷ்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து உள்ளூர் போலீசார் அவரை அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்துள்ளனர், இது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர். ஒருவழியாக டவரிலிருந்து அஜய்குமார் கீழே இறங்கிய நிலையில், கணவன், மனைவி கவுன்சிலிங்குக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.