முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் ஒரே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் காணொளி வெளியாகி உள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையை இறுக்கமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ராஜபக்ஷ ரெஜிமென்ட் தற்போது அதிகாரங்களை இழந்துள்ளனர்.
கடந்த எட்டு வருடங்களாக அரசியல் தளத்தில் மும்முரமாக செயற்பட்டு, பல மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள ராஜபக்ஷ குடும்பம் தற்போது அமைதியாக உள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
யோகாசன பயிற்சியாளர் முன்னிலையில், அனைவரும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.