கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பாரிய ஹோட்டலுக்கு மஹிந்த குடும்பம் நேற்று முன்தினம் விஜயம் செய்துள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள Shangri-La ஹோட்டலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71வது பிறந்த தினத்தை நேற்று முன் தினம் (18) கொண்டாடினார்.
இதன்போது Shangri-La ஹோட்டலுக்கு அழைக்கப்பட்ட மஹிந்த அங்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மைத்திரிக்கு இணையாக மஹிந்தவும் மீண்டும் ஹோட்டலை திறந்து வைத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஹோட்டல் திறக்கப்பட்ட அன்று மஹிந்த குடும்பத்தினரை அழைத்து மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், நேற்றையதினம் மஹிந்தவின் பிறந்தநாள் என்பதால், அன்றையதினம் மஹிந்தவினை அழைக்குமாறு Shangri-La ஹோட்டலின் நிர்வாகியும் கோடீஸ்வர வர்த்தகருமான Sajad Mawzoon ஹோட்டல் நிர்வாக குழுவிடம் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய நேற்று இரவு மஹிந்த உட்பட குடும்பத்தினருக்கு இராப்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரபல சீன உணவுகள் உட்பட பல பாரம்பரிய உணவுகள், பெறுமதியான மதுபானங்கள் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி, பிரதமர் உட்பட குழுவினரை 32 ஆம் மாடிக்கு அழைத்து சென்று தேனீர் விருந்து ஒன்றே வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வு அறைக்கு மஹிந்த செல்லும் போது, எங்கள் ஜனாதிபதி என அவரை Sajad Mawzoon வரவேற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மஹிந்த ஆட்சியின் போது சீனாவின் மிகவும் நெருங்கிய நண்பரான மஹிந்தவினால், குறித்த ஹோட்டல் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.