Site icon ilakkiyainfo

ஹிருனிக்காவின் மெய்பாதுகாவலர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

பாராளுமன்ற உறுப்பனர் ஹிருனிகா பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் 8 பேரில் 6 பேருக்கு இரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை 12 வருடங்களாக ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 32 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில் , குறித்த ஆறு பேருக்கும் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version