இதனை அவதானித்த ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தேடுதல் நடாத்தினர்.
இதன்போது பொலிசாரைக் கண்ட கடத்தல் காரர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனை அவதானித்த பொலிசார் குறித்த காரை விரட்டியுள்ளனர். இருப்பினும் நீண்டதூரம் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் துரத்திய பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவி கடத்தல்கார்கள் தப்பிச் சென்றனர்.
இருப்பினும் ஊர்காவல்த்துறையில் இருந்து யாழ்ப்பாணம் வரை விரட்டிய பொலிசார் காரை நெருங்குவதனை அவதானித்த காரினை ஓர் வீட்டிற்குள் நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதனை அவதானித்த பொலிசார் காருடன் ஆடுகளை மீட்டனர்
இவ்வாறு மீட்கப்பட்ட காரினையும் 8 ஆடுகளையும் ஊர்காவற்றுறைப் பொலிசார் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதோடு குறித்த காரின் இலக்கத்தினை வைத்து அதன் உரிமையாளரை இனங்காணும் முயற்சி இறங்கியுள்ளனர்.
குறித்த சொகுசு காரின் பின் இருக்கைகள் அகற்றப்பட்டு இதற்காகவே தயார் செய்யப்பட்ட நிலையில் காணப்படும் குறித்த கார் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆடுகளை நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.