யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை – வன்னிச்சி அம்மன் கோயில் பகுதிக்கு அண்மையிலேயே இவ்வாறு புலிக் கொடி ஒன்று பறப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தையொட்டி, இனந்தெரியாத நபர்களால் இவ்வாறு புலிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள், யாழ். பல்கலைக்கழகத்திலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.