வடக்கின் பல பகுதிகளிலும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் சிலவும், பொது அமைப்புக்கள் சிலவும், மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
நவம்பர் 27 ஆம் திகதி விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் பெரியளவில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறவில்லை. இம்முறை மிகவும் சிறப்பாக மாவீரர் தினத்தை முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
வட பகுதியில் யாழ்ப்பாணத்தின் கோப்பாய், சாட்டி, உடுத்துறை, தீருவில், யாழ்பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் ஆகிய பகுதிகளிலும், மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளியிலும், வவுனியாவில் ஈச்சங்குளத்திலும், முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம், முள்ளியவளை, அளம்பில், தேராவில், இரணைப்பாலை, முள்ளியவாய்கால், கயட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களில் நடைபெறவுள்ளதுடன், இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களின் முன்பாகவும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதேபோல், கிழக்கு மாகாணத்திலும் மாவீரர் தின ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது.