பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 13 வயது சிறுவனுக்கு குழந்தை பிறந்தது, இச்சிறுவனே பிரித்தானியாவின் இளம் வயது தந்தை என கருதப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தைக்கு வேறு ஒரு நபர்தான் தந்தை என டிஎன்ஏ சோதனையின் மூலம் தெரியவந்தது.
மன்செஸ்டரை சேர்ந்த Alfie Patten (13) என்ற பள்ளி சிறுவனுக்கும், இவனது காதலியான Chantelle Steadman (14) என்ற சிறுமிக்கும் குழந்தை பிறந்தது. இச்சிறுவனே பிரித்தானியாவின் இளம்வயது தந்தை என கூறப்பட்டு வந்த நிலையில், இச்சிறுவனின் தாய் இதனை தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
ஆனால், காதலி Chantelle Steadman கூறுகையில், Alfie Patten தான் இக்குழந்தையின் தந்தை. அவன் மிகச்சிறந்த தந்தையாக இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் இருவரும் முறையாக எங்கள் குழந்தையை வளர்ப்போம் என கூறிவந்தார்.
இதனை முற்றிலுமாக மறுத்த சிறுவனின் தாய், நிச்சயம் இது எனது மகனின் குழந்தையாக இருக்க முடியாது, ஏனெனில் அவனே ஒரு குழந்தை, இன்றுவரை சில விடயங்களுக்காக அவன் பலரை சார்ந்து தான் இருக்கிறான்.
இக்குழந்தை எனது மகனுக்கு பிறந்ததாக இருக்காது என்பதை நிரூபிக்க, டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதையடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்தததையடுத்து, அக்குழந்தை Tyler Barker(15) என்ற 15 வயது சிறுவனின் குழந்தை என தெரியவந்தது.
இச்சிறுவனும், Chantelle வும் காதலர்களாக இருந்துள்ளனர், குடிபோதையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததன் விளைவாக Chantelle கர்ப்பமடைந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து Alfie Patten தனது தாயுடன் சென்றுவிட்டான், இருப்பினும் இச்செய்தி பல செய்திதாள்களில் வெளியானதால் தனக்கு அவமானமாக இருந்தது என்றும் பள்ளிப்படிப்பினை என்னால் தொடரமுடியவில்லை என Alfie Patten கூறியுள்ளான்.
மேலும் வேலை தேடி சென்றால் கூட எனக்கு வேலை கொடுக்க மறுத்தார்கள் என வேதனையுற்றுள்ளான்.