ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»நால்வர் பலி; 23 பேரை காணவில்லை; நீர் நிலைகளில் அண்டியுள்ளோர் எச்சரிக்கை- (வீடியோ)
    உள்நாட்டு செய்திகள்

    நால்வர் பலி; 23 பேரை காணவில்லை; நீர் நிலைகளில் அண்டியுள்ளோர் எச்சரிக்கை- (வீடியோ)

    adminBy adminNovember 30, 2017No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

    சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.

    கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட 23 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

    ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3 பேரும், காலி மாவட்டத்தில் 10 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 10 பேரும் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    கடலுக்கு சென்ற 3 மீனவ படகுகள் காணாமல் போயுள்ளதாக மீன்பிடிதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

    கஹவ கடற்பரப்பில் மீன்பிடிக்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, தங்கல்லை கடற் பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீன்பிடி திணைக்களம் கோரியுள்ளது

    இதேவேளை, நில்வளா கங்கை, பிட்டபெத்தறை, சபுகொட, பாணந்துகமிந்த, கிங் கங்கை, தவலம நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

    எனவே தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குகுளே கங்கையின் இரு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் இங்கிரிய, பதுரெலிய, அகலவத்தை, பிங்கிரிய, மதுராவல ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

    அத்துடன் மகாவலி கங்கையின் இரு கரைகளிலும் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    நாட்டில் சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை, மீனவர்களைக் காணவில்லை, மண் சரிவு அபாயம் நிலவுகிறது
    30-11-2017

    Sri-Lanka-Rains-fbநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மேல், மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

    நேற்றிரவு வரை பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளுக்கு அமைய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

    இடர் முகாமைத்துவ நிலையத்துடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

    மேலும், இந்த பாடசாலைகளில் இன்று நடத்தப்படவிருந்த தவணைப்பரீட்சை மற்றுமொரு நாளில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

    இதேவேளை, சில பாடசாலைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவங்கள் தொடர்பில் மதீப்பீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.

    இதேவேளை, நேற்றிரவு கடலுக்கு சென்ற 07 படகுகள் காணாமற்போயுள்ளன.

    குறித்த படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    கடற்படையினரின் உதவியுடன் காணாமற்போயுள்ள படகுகளைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலுள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையாலும், வெள்ள நீர் நிரம்பியுள்ளதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

    இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

    நேற்றிரவு வீசிய பலத்த காற்றுடன் கூடிய வானிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது

    மேலும், பல பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

    இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    பலத்த மழை காரணமாக பல பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

    பலத்த மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

    களுத்துறை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மண் சரிவிற்கான அறிகுறிகள் தென்படுமாயின் குறித்த பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

    Post Views: 672

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    கொழும்பில் பயங்கரம் – கர்ப்பிணியை கத்தியால் குத்தி வயிற்றிலிருந்த குழந்தையை கொன்ற கணவர்

    May 21, 2022

    ரயிலுடன் வேன் மோதி விபத்து: நால்வர் காயம்

    May 21, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2017
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022

    சுறாக்களின் யுத்தத்தில் சிறுமீன்களின் தத்தளிப்பு

    May 22, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    • இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version