மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை அமோக வெற்றியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்று மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையில் 17 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
லேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 05 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 04 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 04 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 04 ஆசனங்களையும், மூன்று சுயேட்சைக் குழுக்கள் தலா 03ஆசனத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.