துபாயில் தனது உறவினரது திருமணத்திற்கு சென்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்றி திடீரென குளியலறையில் நிலைத்தடுமாறி பாத் டப்பில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார் நடிகை ஸ்ரீதேவி.”
துபாயில் தனது உறவினரது திருமணத்திற்கு சென்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்றி திடீரென குளியலறையில் நிலைத்தடுமாறி பாத் டப்பில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார் நடிகை ஸ்ரீதேவி.
பல சிக்கல்களுக்கு பின்பு உறவினர்களிடம் நேற்று அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எம்பாமிங் செய்து தனிவிமானம் மூலம் நேற்று மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.
பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.