ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, March 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    எம்ஜிஆருடன் நெருக்கம்.. கதை விடுகிறாரா ரஜினிகாந்த்?

    AdminBy AdminMarch 7, 2018No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை: அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்து எம்ஜியாருக்கும் தனக்கும் ரொம்பவே நெருங்கிய தொடர்பு உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டதாக விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.

    சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, நேற்று மாலை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது.
    எம்ஜிஆர் ஆதரவு வாக்குகள் மூத்த அரசியல்வாதியும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தவருமான ஏ.சி.சண்முகத்தின் கல்லூரி அது என்பதால் கண்டிப்பாக ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் உரையை நிகழ்த்துவார் என கூறிவந்தனர் அரசியல் விமர்சகர்கள்.

    அதை நிரூபிக்கும் வகையில் ரஜினிகாந்த்தின் பேச்சு இருந்தது. எம்ஜிஆர் ‘பக்தர்களின்’ வாக்குகளை குறிவைத்தே ரஜினிகாந்த் பேச்சின் பெரும்பகுதி அமைந்திருந்தது.
    எம்ஜியாருக்காகவே ஓட்டு எம்ஜிஆருக்காகவே அதிமுகவுக்கு வாக்களிக்கும் வயதான ஆண்களும், பெண்களும் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் பெருமளவிற்கு உள்ளனர்.

    எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் பேச முடியாதபடி படுத்தபடுக்கையாக சிகிச்சை பெற்றபோதுகூட அவருக்காக ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள்தான் இந்த வாக்காளர்கள்.

    எனவேதான் ஜெயலலிதா அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு முதலில் எம்ஜிஆரை முன்னிறுத்தி வாக்குவேட்டையாடினார்.

    பிறகு தன்னை மட்டுமே கட்சியின் பேனர், போஸ்டர்கள் என அனைத்திலும், முன்னிறுத்தி, அடுத்த எம்ஜிஆர் தான்தான் என்பது போல காட்டிக்கொண்டார்.
    அரசியல் வாரிசு இப்போது அதுபோன்ற ஒரு ஸ்டார் பிம்பம் அதிமுகவில் இல்லை. எனவே எம்ஜிஆரின் அரசியல்வாரிசாக தன்னை காண்பித்துக்கொண்டு அவரது ஆதரவாளர்கள் வாக்குகளை ஈர்ப்பதே ரஜினிகாந்த் திட்டம்.

    ஆனால், எம்ஜிஆர் ஆட்சி காலத்தை பார்த்த பல முதியவர்களுக்கும், ரஜினிக்கும், எம்ஜிஆருக்கும் பெரிதாக நல்ல உறவு இல்லை என்பதே மனதில் நிழலாடும் அம்சம்.

    இந்த மனப்பாங்கை உடைக்கவே, எம்ஜிஆருக்கு, ஜெயலலிதாவைவிட அதிமாக புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த்.

    தனிப்பட்ட நட்பாம் எம்ஜிஆரின் சமூக பிம்பத்தை மட்டுமே புகழ்ந்தால் எல்லோரையும்போல தானும் புகழ்வதாகவே நினைப்பார்கள் என்பதை அறிந்திருந்த ரஜினிகாந்த், எம்ஜிஆருக்கும் தனக்கும் தனிப்பட்ட அளவில் மிகுந்த நெருக்கம் இருந்ததாக பேச்சின்போது ‘அள்ளிவிட்டார்’.

    ரஜினிகாந்த் உச்சநடிகராக வளர்ந்து வந்த நேரத்தில் நடிப்பு துறையில் இருந்து விடைபெற்று முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர். அப்போது இவ்விருவருக்குமே நெருக்கமான நட்பு இல்லை என்பது மூத்த தலைமுறைக்கு நன்கு தெரிந்த விஷயம்.

    rajini654-1520321801
    எம்ஜிஆருடன் நெருக்கமாம்
    ஆனால் ரஜினிகாந்த்தோ, தன்னைபற்றி தனது மனைவி லதா குடும்பத்தாரிடம் நல்லபடியாக சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவைத்தது எம்ஜிஆர் என்றார்.

    ராகவேந்திரா மண்டபம் அமைய காரணம் எம்ஜிஆர் என்றும் தெரிவித்தார். தனது உடம்பை நன்கு கவனித்துக்கொள்ளும்படி எம்ஜிஆர் கூறியதாகவெல்லாம் கூறினார் ரஜினிகாந்த்.

    பரபரப்பு செய்திகள் தெரியுமா?
    ஆனால், 1978ம் ஆண்டில் நரம்பியல் பிரச்சினை என கூறி ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலை என்ன என்பதும், அப்போது எம்ஜிஆர்-ரஜினிகாந்த் நடுவே என்ன மாதிரி உறவு இருந்தது என்பதும் பல ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வெளியானவை.
    இதை படித்த அப்போதைய தலைமுறை ரஜினிகாந்த் பேச்சை கேட்டு ஷாக்காகினர் என்றுதான் கூற வேண்டும்.

    இந்த பேச்சை பார்த்துவிட்டுதான், “பொய் சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் எல்லாம் சொல்ல கூடாது” என்ற கவுண்டமணி டயலாக்கை போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

    rajinikanth65-1520321837
    எம்ஜிஆர் ஆட்சி என்றால்?
    ரஜினிகாந்த் கூறியது உண்மையா, பொய்யா என்ற விமர்சனங்கள் ஒருபக்கம் என்றால், எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என ரஜினிகாந்த், கூறுவதும் கூட சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    எம்ஜிஆர் ஆட்சிக்கு வாக்களித்தவர்கள் யார்? எது உண்மை எது பொய், கொள்கை என்ன என்ற எந்த கேள்வியும் கேட்காமல், திரையில் பார்த்த நடிப்பை நிஜம் என நம்பி வாக்களித்தவர்கள்.

    அதேபோன்ற ஆட்சியை தரப்போகிறேன் என ரஜினி கூறியிருப்பதன் மூலம், தமிழகத்தில் கொள்கை சார்ந்த, வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு தான் தயார் இல்லை என்பதை ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    Post Views: 2

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2018
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version