ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, March 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    கண்டி சம்பவம் : பதற்றம் தொடர்கிறது.! (முழு விபரமும் உள்ளே…)

    AdminBy AdminMarch 7, 2018No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளை யில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இரா­ணு­வத்­தினர் உட்­பட முப்­ப­டை­யினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் பதற்ற நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது.

    இதே­வேளை தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவின் திகன- ராஜ­வல பகு­தியில் இன­வா­தி­களால் தீ மூட்­டப்­பட்டு எரிக்­கப்­பட்ட வீட்டுக்குள் இருந்து முஸ்லிம் இளைஞர் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

    21 வய­து­டைய அப்துல் பாஸித் எனும் இளை­ஞரின் சட­லமே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது ஜனாஸா நேற்று மாலை நல்லடக்கம் செய்­யப்­பட்­டது.

     இந் நிலையில் நேற்று முன் தினம் கண்டி மாவட்டம் முழு­வதும் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று காலை அது தளர்த்­தப்­பட்­ட­துடன் மீண்டும் தெல்­தெ­னிய மற்றும் பல்­லே­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு மட்டும் மறு அறி­வித்தல் வரை ஊரங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

    அத்­துடன் தெல்­தெ­னிய – திகன பகு­தியை மையப்­ப­டுத்தி இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் சந்­தேக நபர்­க­ளையும் அதன் பின்­ன­ணியில் செயற்­பட்­டோ­ரையும் கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

    அதன்­படி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்புக் குழு­வொன்று நேற்று தெல்­தெ­னிய நோக்கி சென்­ற­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

     நேற்­றைய தினம் வன்­மு­றைகள் எதுவும் குறித்த பகு­தியில் பதி­வா­காத போதும், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை மற்றும் இரா­ணுவ பாது­காப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்­ப­தாக பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

    அத்­துடன் ஏற்­க­னவே முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைத்­தமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 24 சந்­தேக நபர்­க­ளையும் நேற்று காலை தெல்­தெ­னிய நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­த­தா­கவும் அதன்­போது அவர்­களை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் கூறினார்.

    இத­னி­டையே இரா­ணுவ பாது­காப்­பா­னது கண்டி நக­ருக்கும், தெல்­தெ­னிய , திகன மற்றும் கட்­டு­கஸ்­தோட்டை உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கும் தொடர்ந்தும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல­திக படை­ய­ணி­யொன்றும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து கேச­ரிக்கு தெரி­வித்தார்.

     எவ்­வா­றா­யினும் நேற்று முன் தினம் கண்டி முழு­வ­தற்கும் ஊர­டங்கு அமுல் செய்­யப்­பட்ட நிலையில், வன்­மு­றை­யா­ளர்கள் அந்த நேரத்­திலும் தாக்­கு­தல்­களை நடாத்­தி­யுள்­ளனர்.

    குறிப்­பாக  திகன முதல் கெங்­கல்ல, பல­கொல்ல வரை­யி­லான பகு­தி­களில் உள்ள அனைத்து முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் இடையில் இருந்த தமி­ழர்­களின் கடை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

     நேற்று முன் தினம் திரண்ட  ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட  பெரும்­பான்­மை­யி­னக்­கு­ழு­வினர் தமது வெளி­மா­வட்ட வசிப்­பிடம் நோக்கி செல்லும் வழியில் திக­னவில் மட்­டு­மன்றி கட்­டு­கஸ்­தோட்டை வரை­யுள்ள பல முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மற்றும் குடி­யி­ருப்­புக்கள் மீது தாக்­குதல் நடாத்­தி­யுள்­ளனர்.

     இதனால் பல்­லே­கல பொலிஸ் பிரி­விலும் தெல்­தெ­னிய பொலிஸ் பிரி­விலும் கடும் சேதங்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் பிரி­விலும் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

     திக­னவில் மட்டும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்தமான 15 கடைகள் வரை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மொத்தமாக கட்டுகஸ்தோட்டை, தெல்தெனிய மற்றும் பல்லேகலை பொலிஸ் பிரிவுகளில் 10 பள்ளிவாசல்கள், 50 வரையிலான வர்த்தக நிலையங்கள் 30 வரையிலான வீடுகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பள்ளிவாசல் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் எனையவை பகுதியளவிலும் சிறு அளவிலும் சேதங்களுக்கு உள்ளகையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும், குறித்த அசாதாரண சூழ்நிலையினால், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

    சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிஸ் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 

    இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Post Views: 13

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்

    March 27, 2023

    29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும்

    March 26, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2018
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version