சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக, ஐதேகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர், சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.