ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, March 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    கொழும்பு மற்றும் அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி! (Video)

    AdminBy AdminMarch 19, 2018No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கொழும்பு மெசஞ்சர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    அவர் போாதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

    கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு சென்று மீளத்திரும்புகையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

    தெமட்டகொட பகுதியைச் ​சேர்ந்த 42 வயதான அண்டனி ராஜ் என்பவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

    துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் மற்றும் உயிரிழந்தவருக்கிடையில் காணப்படும் பிரச்சினையின் விளைவாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

    மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் காரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி, தலைமறைவாகினர்.

    தலைமறைவாகிய சந்தேகநபர்களை தேடுவதற்காக பொலிஸ் அதிரடிப்படையினர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

    துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சந்தரப்பத்தில் பெண்ணொருவரும் காரில் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

    காயமடைந்தப் பெண்ணின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதுடன், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இதேவேளை, கடந்த ஏழாம் திகதி புதுக்கடை சிறைச்சாலைகள் வீதியில் உள்ள காவலரணுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மனித தலைக்கான உடல் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

    அங்குணுகொலபெலஸ்ஸ நீதவான் குஷிகா குமாரசிறி முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

    அங்குணுகொலபெலஸ்ஸ பாழடைந்த குழு ஒன்றுக்குள் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடல் அண்மையில் கண்டுபடிக்கப்பட்ட தலையுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

    முல்லேரியாவ பகுதியைச் சேர்ந்த கொஸ் மல்லி எனப்படும் பண்டிதகே சாந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கும்புறுபிட்டிய பகுதியில் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட 8 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளது.

    இதேவேளை, கொழும்பு – அத்துருகிரிய ஒரவல கல்வருசா வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மற்றுமொரு மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் -மகிந்த

    March 27, 2023

    தங்கலை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டி விவசாய உத்தியோகத்தர் கொலை.

    March 27, 2023

    மாணவனை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 12 வயதான மாணவன்: கம்பஹாவில் சம்பவம்!

    March 27, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2018
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023

    டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் -மகிந்த

    March 27, 2023

    தங்கலை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டி விவசாய உத்தியோகத்தர் கொலை.

    March 27, 2023

    மாணவனை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 12 வயதான மாணவன்: கம்பஹாவில் சம்பவம்!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    • இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!
    • டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் -மகிந்த
    • தங்கலை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டி விவசாய உத்தியோகத்தர் கொலை.
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version