வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாததால், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸய்ட் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது.
எனினும் விசாரணைகளுக்கு ஆஜராகாததால், கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார இரண்டு சந்தேகநபர்களுக்கும் பிடியாணை பிறப்பித்து்ளளார்.