காலி- யக்கலமுல்ல பிரதேசத்தில், உயிரழந்த நபர் ஒருவரின் சடலத்துக்கு பதிலாக, வேறொரு நபரின் சடலத்தை மலர்சாலை ஊழியர்கள் மாற்றி அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அஹங்கம- மெலியகொட பிரதேசத்தில் கடந்த வாரம் உயிரிழந்த 65 வயதுடைய, நபர் ஒருவரின் சடலம் வெலிகம பிரதேசத்தில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, மற்றுமொரு சடலமும், இதே மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், குறித்த சடலங்கள் மலர்ச்சாலையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு பிரேதப் பெட்டியை திறந்து பார்த்த போது, சடலங்கள் மாறியிருந்ததைக் கண்டு வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த மலர்ச்சாலையின் உரிமையாளக்கு இந்த சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த சடலத்தை அவர்கள் எடுத்துச் சென்று உரிய சடலத்தை வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மலர்ச்சாலையில், பணிபுரியும் ஊழியர்களின் கவனக்குறைவே, சடலம் மாறியமைக்கான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.