வேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி , சரி பிழைகள் பற்றி ஆராயாமல் ஒரேயடியாக விமர்சிப்பதும், பின்னர் அதே காரியத்தை தாமே செய்வதும் இயக்கங்களின் வழக்கம்தான்.
தம்மால் முடியாததை இன்னொரு இயக்கம் செய்து முடித்துவிட்டதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும், பிறிதொரு இயக்கம் மீது விமர்சனம் வைத்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டதுமாகவே அவ் விமர்சனங்கள் அமைகின்றன.
இதற்கு விதிவிலக்கான உதாரணங்கள் காணப்படவில்லை.
வன்னியில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்த வசதியாக நிறுவப்பட்ட டொலர் பாம் கென்பாம் குடியேற்ற வாசிகளான காடையர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.
அத் தாக்குதலின் நியாயத்தை வெளிப்படுத்தி ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்க வெளியீடான ஈழச் செய்தியில்கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.
சாதாரண சிங்கள மக்கள்மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. குற்றவாளிகளாக கருதப்பட்ட காடையர்களுக்கு ஆயுதம் வழங்கி குடியமத்தினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.
அக்காடையர்கள்தான் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். அது தவிர்க்க முடியாததே என்று ஈழச் செய்தியில் தொிவிக்கப்பட்டது.
ஈழச் செய்தி ஆசிரியராக அப்போதிருந்தவர் ரமேஷ். பின்னர் ஈ. பி. ஆர். எல். எஃப் செயலாளர் நாயகமாக இருந்த பத்மநாபா ரமேசிடம் அவ்வாறான செய்திகளை வெளியிடுவது எங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை முற்போக்கு சக்திகளிடம் உருவாக்கிவிடும்.
எனவே இனிமேல் அவ்வாறான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் ஈ. பி. ஆர். எல். எஃப். பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் ஆளும்கட்சியாக இருந்தபோது திருமலையில் இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
_
IPKF – Indian peacekeeping forces soldie
இரகசிய உத்தரவு
திருமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்மீது ஈ. பி. ஆர். எல். எஃப் நடத்திய தாக்குதலுக்கு இந்தியப் படையினர்தான் பின்னணியில் நின்றனர்.
திருமலையில் இந்தியப் படையினர் வந்திறங்கியதும் நகரில் அருந்த சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் திருமலை கோட்டைக்குள் இருந்த இராணுவமுகாமுக்குள் சென்றுவிட்டனர். கிட்டத்தட்ட மூவாயிரம்பேர் அவ்வாறு சென்றிருப்பர்.
அக் கோட்டைக்கு சமீபமாக இருந்த காவலரணில் நின்ற இந்தியப் படையினர் இரண்டுபேரை கோட்டைக்குள் இருந்து வந்து வெட்டிப்போட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.
இதனையடுத்து இந்தியப் படையினருக்கு சிங்கள குடியேற்றவாசிகள் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
திருமலையில் அப்போது நின்ற ஈ. பி. ஆர். எல். எஃப் . உறுப்பினர்களையும் ஏனைய இயக்க உறுப்பினர்கள் சிலரையும் இந்தியப் படை அதிகாரி ஒருவர் அவசரமாக அழைத்தார்.
திருமலை நகரிலும் நகரைச் சார்ந்த பகுதிகளிலும் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்துங்கள். உங்களுக்கு 24 மணி நேர அவகாசம் தருகிறேன். நெருப்பு வரக்கூடாது , வேட்டுச் சத்தம் கேட்கக்கூடாது, வேலையைக் காட்டுங்கள்.
இந்திய அதிகாரி கூறிய இரகசிய உத்தரவு அதுதான்.
ஈ. பி. ஆர். எல். எஃப் .இயக்கத்தைச் சேர்ந்த சங்கரன், கிறிஸ்டி ஆகியோரின் தரமையில் ஈ. பி. ஆர். எல். எஃப் , ரெலோ இயக்க உறுப்பினர்கள் காரியத்தில் இறங்கினார்கள்.
திருமலையில் உள்ள கணேசன் சந்தியில் சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமான தேனீர்கடை ஒன்றிருந்தது.
தாக்குலுக்கு முதலில் இலக்கானது அக் கடைதான். தேனீர் கடை நடத்திய சிங்களவரும் இன்னொரு சிங்களவருமாக இரண்டுபேர் கடைக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இச் செய்தி எங்கும் உடனடியாகப் பரவியதால் நகரில் இருந்த சிங்கள மக்கள் இலங்கை இராணுவ முகாங்களை நோக்கி உயிர்தப்ப ஓடினார்கள்.
சிங்கள மக்களின் வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்த ஈ. பி. ஆர். எல். எஃப் . இயக்கத்தினர் கொளுத்திவிட்டு எறியும் கைக்குண்டுகளை வீசினார்கள்.
சில வீடுகளுக்குள் ஒளிந்திருந்த சிங்கள மக்கள் சிலரை கழுத்தை வெட்டி விட்டு மலசலகூட குழிக்குள் அவர்களது உடல்களைப் போட்டனர்.
அநுராதபுரச் சந்தியில் இருந்த ரமணி ஹாட்வேயார் என்னும் கடையும் தாக்கப்பட்டது. இதனை அறிந்த அநுராதபுரம் சந்நியில் இருந்த சிங்கள மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.
வில்லுண்டிச் சந்தியில் ராக்ஸி ஒன்றில் வந்தகொண்டிருந்த சிங்கள பயணி ஒருவரும் சாரதியும் வெட்டிக் கொல்லப்பட்டனர்
திருமலையில் அபேபுர, மக்கோ, லவ்லேன, விஜிதபுர , சிறிமாபுர ஆகிய பகுதிகளில் இருந்த சிங்கள மக்கள் 24 மணிநேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
இத் தாக்குதல் காரணமாக 20க்கு மேற்பட்ட சிங்கள கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது. எனினும் பலரது உடல்கள் மலசலக் குழிகளுக்குள் வெட்டிப் போடப்படதாலும், போதிய விசாரணைகள் நடத்தப்படாமையாலும் சரியான விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.
இத்தாக்குதலில் பொிதும் பலியானவர்கள் அப்பாவிச் சிங்கள மக்கள்தான். கலவரங்களை தூண்டிவிடும் காடையர்கள் மோசமான குற்றவாளிகள் மற்றும் மக்களுக்கு அடிக்கடி தொல்லைகொடுக்கும் சமூக விரோதிகள் ஆகியோர் தாக்குதலில் சிக்காமல் இலங்கை இராணுவ முகாம்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் தப்பிஒட முடிந்தது எப்படி? என்பதற்கான காரணம் சுவாரசியமானது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தேவையானவர்களை இனம் கண்டு மடக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
அவர்கள் கவனமெல்லாம் சிங்கள மக்கள் தங்கள் வீடுகளில் விட்டுச் செல்லும் உடமைகளைக் கொள்ளையடிப்பதில்தான் இருந்தது. அந்த ஆசை ஏற்பட்டதும் செய்ய வேண்டிய முக்கிய வேலையை மறந்து போனார்கள்
பெறுமதியான பொருட்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றை கொள்ளையிட்டு வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
கொள்ளைடிப்பதிலும் அகப்பட்டதைச் சுருட்டுவதிலும் அவர்கள் தாமதித்துக் கொண்டிருந்தமையால் குடியேற்றத் திட்டங்களுக்குள் இருந்த மோசமான சமூகவிரோத நபர்கள் சுலபமாக தப்பி ஓடிவிட்டனர்.
ஓடமுடியாமல் வீடுகளுக்குள் பாதுங்கி இருந்த சாதாரண ஆட்கள்தான் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
சிங்கள குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் செய்தியை அறிந்த திருமலை கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு புறப்பட்டனர்.
அதனைக் கண்டுவிட்ட இந்தியப் படையினர் கடற்படைமுகாமை நோக்கி தமது டாங்கிகளை நிறுத்திவைத்ததுடன் கடற்படை முகாம் வாயிலை நோக்கி எச்சரிக்கைக்காக ஒரு குண்டையும் தீர்தனர்’
அத்தோடு முகாமில் இருந்து புறப்பட்டு வரும் முயற்சியை கடற்படையினர் கைவிட்டனர்.
கடற்படையினர் எச்சாிக்கை செய்யப்பட்டு தடுக்கப்பட்ட விபரத்தை இலங்கை அரசு பொிதுபடுத்தாமல் விட்டதால் அது ஒரு பிரச்சனையாக மாறவில்லை.
இத்தாக்குதலில் முன்வரிசையில் நின்ற சிலர் பெரும் பணக்காரராகிவிட்டார்கள். அவர்களில் ஒருவர் சங்கரன் கொஞ்சக் காலத்தின் பின்னர் சங்கரன், கிறிஸ்டி ஆகியோரும் வேறு சிலரும் கொள்ளையடித்த பணதடதில் கூட்டாகச் சேர்ந்து வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள்.
இவர்கள கொள்ளை ஆசையால் தப்பவிட்ட சமூகவிரோத நபர்கள் சிலர்தான் இந்த- படை வெளியேறிய பி்னனர் மீண்டும் வந்து மக்களுக்கு தொல்லை கொடுத்தனர்.
இந்திய படையினர் தாமாக நேரடியாக இறங்கியும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை சிலவற்றை அப்புறப்படுத்தினர்.
கொள்ளையும் கண்டணமும்
திருமலை கேணியடி தொடுவாய்ப் பிள்ளையார் கோயில் காணிக்குள் இடம்பெற்றிருந்த அத்துமீறிய குடியேற்றமும் இந்திய படையினரால் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்திய படையினர் திருமலையில் நின்றபோது திருமலையில் இருந்த சிங்கபள மக்கள் பட்டினவீதியால் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கை இராணுவத்தினரும் அவ்வீதியால் சென்றுவர முடிந்தது.
(LTTE Women Guerrillas stand victorious in front of an Indian Army tank destroyed by them. இது 87-90 ஆண்டு காலத்து பெண் புலிகள் அணி. )
கொலையும் கண்டனமும்
யாழ் சென்பற்றிஸ் அதிபர் ஆனந்தராசா புலிகள் இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை முன்னர் விபரித்திருந்தேன்.
ஈ. பி. ஆர். எல். எஃப் உட்பட்ட சகல இயக்கங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கண்டிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.
1989 ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்கத்தால் ஒரு ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சண்முகலிங்கத்தை ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் சுட்டுக்கொன்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்கத்தினர் யாழ். இந்துக் கல்லூரி அருகே சென்றபோது புலிகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்டனர்.
ஈ. பி. ஆர். எல். எஃப் நாடாளுமன்ற வேட்பாளர் யோகசங்கரியை தீாத்துக்கட்டவே புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் யோகசங்கரியை தரையில் படுக்கவைத்து காப்பாற்றினார்கள்.
யாழ். இந்துக்கல்லூரிக்குள் மறைந்து நின்றுதான் புலிகள் சுட்டிருக்கவேண்டும் என்று சந்தேகப்பட்ட ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் இந்துக் கல்லூரியை நோக்கி சரமாரியாகச் சுடத்தொடங்கினர்.
கல்லூரி மண்டபத்தில் இருந்த மாணவர்கள் கீழே படுத்து உயிர்தப்பிக் கொண்டனர்.
ஆசிரியர் சன்முகலிங்கமும் ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பாடசாலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தம் கண்ணடனத்தை தெரிவித்தனர்.
இயக்கத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். ஈழமாணவர் பொதுமன்றம் என்ற பெயரில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
மறைமுக மிரட்டல்
மாணவர்களையும், ஆசிரியர்களையும் மிரட்டுவது போலவே அந்த அறிக்கை காணப்பட்டது.
அறிக்கை பின்வருமாறு கூறியது.
″ ஆசிரியர்களோ!! மாணவர்களே!! நாம் மாணவர்களின் சீருடைகளில் இரத்தக்கறையையோ, கரும்பலகைகளில் துப்பாக்கித் துவாரங்களையோ, அல்லது வகுப்பறைகளில் ஆசிரியர்களின் சவப்பெட்டிகளையே பார்க்கவிரும்பும் வக்கிர உணர்வு படைத்தவர்கள் அல்ல.
அராஜக தமிழீழ விடுதலை புலிகள் அதிகார வெறிப் போராட்டத்தில் ஏனைய இயக்கப் போராளிகளை, அப்பாவி பொதுமக்களை, ஆசிரியர்களை, மாணவர்களை பணயம் வைத்துள்ளார்கள்.
அப் பணய நாடகத்தின் ஒரு அங்கமே யாழ். இந்துக்கல்லூரிச் சம்பவம். புலிகள் கல்லுரியில் நின்று துப்பாக்கி பிரயோகம் செய்ததாலேயே ஆசிரியர்கள் பலியாக வேண்டி ஏற்பட்டது.
இக் கொலைச் சம்பவங்களுக்கு எதிராகப் போராடுவதும் ஆட்சேபனை கிளப்புவதும் ஆசிரியர் மாணவர்களது உரிமை.
ஆனால் இக் கொலைகளிலன் சூத்திரதாரிகளுக்கு ஆதரவாக எம்மீது பழிசுமத்தி, பாடசாலைகளை பகிஷ்கரிக்க மாணவர்களை தூண்டிவிடுவதும், கல்வியைச் சீர்குலைப்பதும் அனுமதிக்க முடியாத செயலாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
யாழ்பாண மாவட்டத்தில் ஈ. பி. ஆர். எல். எஃப் இயகத்துக்கு நாடாளுமன்றத் தேர்லில் ஆதரவு மேலும் வீழ்ச்சியடைய இச்சப்பவமும் ஒரு காரணமாக அமைந்தது.
பலத்த தோல்வி
1989 பெப்ரவரி 15இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவாகளான அ. அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, சூசைதாசன், வி.யோகேஸ்வரன் ஆகியோர் தோல்வி கண்டனர்.
இவா்கள் அனைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.
மட்டகளப்பு மாவட்டத்தில் கூட்டணியின் பட்டியலில் போட்டியிட்ட ஏனைய இயக்கங்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் அ.அமிர்தலிங்கம் என்று கூறியிருந்துன் அல்லவா.
தோ்தலில் தோல்வி கண்ட அமிர்தலிங்கம் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு இருந்தது.
மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிவாய்பை தவறவிட்டமையால் தேசிய பட்டியல் மூலம் அவர் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் அவர் குரல் ஒலிப்பது அவசியம் என்றும் கூட்டணியினரும் நினைத்தனர்.
இதனை அறிந்துவிட்டார் வடக்கு-கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள். அமிர்தலிங்கத்தை எப்படியாவது தோல்விகாணச் செய்யவேண்டும் என்பதில் ஒற்றைகாலில் நின்றவர் அவா்தானே.
அமீா பாராளுமன்றம் சென்றுவிட்டால் அவரது பேச்சுக்களும் செய்திகளும் பத்திரிகைகளில் மறுபடி பெரிதாக வரத்தொடங்கிவிடும். தனது குரல் அமுங்கிவிடும் என்று பயந்துபோனார் வரதராஜப்பெருமாள்.
இனியும் மறைமுக முயற்சிகள் சரிப்பட்டுவராது என்று நேரடியாகவே தாக்குதலில் இறங்கினார் பெருமாள்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பின்கதவு வழியாக பாராளுமன்றத்துக்குள் நுழையபார்க்கிறார்கள் என்று பேட்டிகொடுத்தார் பெருமாள்.
அமிாதலிங்கத்தை மேலும் நெருக்கடியில் சிக்கவைக்க, தேசியப் பட்டியல் மூலம் மலையகத் தமிழர் ஒருவருக்கு இடம் தருவதே தமது விருப்பம் என்றும் ஈ. பி. ஆர். எல். எஃப் அறிக்கைவிட்டது.
அமிர்தலிங்கம் மனமுடைந்து போனார். தேசிய பட்டியல் மூலம் எம்.பி. யாகும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார்.
தொடந்துவரும்..
அரசியல் கட்டுரை எழுதுவது அற்புதன்
தொகுப்பு: கி.பாஸ்கரன்-சுவிஸ்