கடந்த 2017 ஆம் ஆண்டு வீதி விபத்தில் மட்டும் 3100 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர மேற்கண்டவாறு கூறினார்.
அந்த ஆண்டில் இடம்பெற்ற 2 ஆயிரத்து 922 விபத்துக்களிலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
மேலும் கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 303 விபத்துக்கள் இடம் பெற்றதாகவும் அதில் 322 பேர் உயிரிழந்ததாகவும் அவர் சுட்டிக்காடிட்டனர்.
அதுமட்டுமன்றி, 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் மட்டும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 4 ஆயிரத்து 585 பேர் கைது செய்யப்பட்டதுடன், அந்த ஆண்டில் 72 ஆயிரத்து 819 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இவர்களை போனற்வர்கள் அன்றைய தினம் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், இன்று விபத்தின் விகிதம் இன்னும் அதிகரித்திருக்கும் என கூறினார்