உள்நாட்டு மனிதர்களே யாசகர்களை சற்று வித்தியாசமான பார்வையில் உற்று நோக்கும் இந்தக் காலகட்டத்தில், யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி அருகில் அமர்ந்து உரையாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழ். வேம்படி சந்திக்கு அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுவர் மீது, யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி ஒருவர் அருகில் உட்கார்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதை வீதியில் சென்றவர்கள் ஆச்சரியத்துடன் உற்று நோக்கியதுடன் பலரும் ஒளிப்படமும் எடுத்துள்ளனர்.