மரத்தின் இரு கிளைகளுக்கு நடுவில் சிக்கி ஒட்டகச்சிவிங்கியொன்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுள்ளது.
ஒட்டகச்சிவிங்கியின் தலை மரமொன்றின் இரு கிளைக்களுக்குள் சிக்கி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சீன மிருகக்காட்சிசாலை அதிகாரியொருவர் தெரிவிக்கையில்,
பத்து வயதான குறித்த ஒட்டகச்சிவிங்கி சீனாவின் குன்மிங் மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்த ஆண் ஒட்டகச்சிவிங்கி.
இந்நிலையில், குறித்த ஒட்டகச்சிவிங்கியின் தலையானது மிருகக்காட்சி சாலையிலுள்ள மரமொன்றின் இரு கிளைகளுக்கு நடுவில் சிக்கியது.
அதனை காப்பாற்றுவதற்காக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அதன் தலை தரையில் அடிபட்டு இறந்தது.
ஒட்டகச்சிவிங்கியை காப்பாற்றும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களின் முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது.
இவ்வாறு இறந்த ஒட்டகச்சிவிங்கியானது கடந்த 5 வருடங்களாக மிருகக்காட்சிசாலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.