சின்னஞ்சிறார்களான பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் குடும்பத்தலைவர் ஒருவர்.
அவர்கள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவத் துறையினரின் பெரும் போராட்டத்தின் பின் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சின்னஞ்சிறார்களான பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் குடும்பத்தலைவர் ஒருவர்.
அவர்கள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவத் துறையினரின் பெரும் போராட்டத்தின் பின் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.
தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
37 வயதுடைய குடும்பத்தலைவர், மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். அண்மையில் அவரது மனைவி மணநீக்கம் கோரியுள்ளார்.
குடும்பத்தலைவர் நேற்றிரவு தனது பிள்ளைகளான 10 வயது மகனுக்கும் 7 வயது மகளுக்கும் உணவில் கிருமிநாசினைக் கலந்து கொடுத்து தானும் உட்கொண்டுள்ளார்.
இதனை, அயலிலுள்ள உறவினர்கள் அறிந்து மூவரையும் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
அங்கிருந்து ஒவ்வொருவராக தனித் தனி அம்புலன்சில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தந்தை மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
தற்போது அவர்கள் மூவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை (1)
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.