மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
நுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக நேற்று (05.05.2018) காலை கிருஷ்ணன் கோயில் வீதி, வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட திருமதி. அழகரெத்தினம் டிசாந்தினி (24வயது) என்கின்ற ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்த பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சடலம் சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன் தொல்லைகளால் ஏழு பேர் தற் கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.